MEMBER LOGIN

User Name :
Password :
Forgot Password        New Registration

Join as Premium User

உங்கள் கேள்விக்கான பதில்கள் உங்கள் ஐயங்களை பதிவு செய்யுங்கள்

Q: என் பக்கத்து மனையில் ஒரு மிகப்பெரிய பாழும் கிணறு உள்ளது, அதை ஒட்டியே எனது மனை அமைந்துள்ளது? கிணறு வரும் இடத்தில், நான் அஸ்திவரம் எழுப்பும்போது ஏதேனும் விசேஷ முன்னேற்பாடுகள் செய்ய வேண்டுமா? -என்.சம்பத். டிவிஎஸ், ஊழியர், சோளிங்கர்


Answer:

உங்கள் மனையில் உள்ள பெரிய பாழும் கிணற்றின் அளவுகள் மற்றும் ஆழம் இவற்றோடு அடி மனையின் மண் வகை என்ன போன்ற விவரங்கள் கொடுக்கப்படவில்லை. அந்தப் பாழும் கிணற்றை பயன்படுத்தப்போவது இல்லை, என்றால், அதைச்சுற்றி 2’0” ஆழத்திற்கு வருமாறு சுற்றி மண்ணை வெட்டி எடுத்து விடவேண்டும்.

அதற்குப் பின் கிணற்றின் 3’0” விட்டம் மற்றும் அந்த இடத்தில் உள்ள தூண்மீது வரும் பாரம் இவற்றிற்கு ஏற்ப 2’0'’ உயரமுடைய எம்25 காங்கிரீட் Fe500 TMT கம்பிகள் வைத்து அந்த காங்கிரீட் பலத்தை Pile Cap வடிவமைப்பு செய்துபோடவும். அதன்மீது பாதுகாப்பாக தூணை நிறுத்தலாம். அந்த கிணற்றின்விட்டம் 3’0'’ அல்லது 4’0'’ அளவில் இருந்தால் அந்தப் பகுதியில் வரும் தூண்களை 5’0'’ (அ) 6’0'’ தள்ளிப்போட்டு - Cantilever grade beamஅமைத்தும் அடித்தளமும், மேல்தளமும்கட்டலாம். 
வடிவமைப்புப் பொறியாளரை அணுகி ஆலோசனை பெற்று அதன்படி அடித்தளம் அமைக்கவும்



Q: நான் எனது ஜி+2 கட்டுமானத்திற்காக கிட்டத்தட்ட 16 பில்லர்களை கடந்த அக்டோபர் மாதம் எழுப்பி இருந்தேன். வெறும் அஸ்திவாரம் வரையில் கான்கிரீட் அமைக்கப்பட்டு தரையில் இருந்து டி.எம்.டி. சென்ட்ரிங் கம்பிகள் அப்படியே விடப்பட்டிருக்கின்றன. மழையின் காரணமாக 2 மாத காலம் கட்டுமானப் பணிகளை அப்படியே விட்டு விட்டேன். தற்போது பணிகள் துவங்கலாம் என்றால், டி.எம்.டி கம்பிகள் அதிகமாக துருப்பித்து இருக்கின்றன. துருவை அகற்றாமல் பணிகளை தொடரலாமா? கூடாது என்றால், துரு அகற்ற என்ன வழி?


 - ஜீவ பிரகாசம், தனியார் நிறுவன கணக்காளர், திருநின்றவூர்.


Answer:

நீட்டிவிடப்பட்ட டி.எம்.டி உறுதியூட்டிக் கம்பிகள் துருப்பிடித்து இருந்தால் கீழ்க்குறிப்பிடும் வழிமுறைகளைக் கடைபிடியுங்கள்.

• கம்பிகளின் மீது Brush கொண்டு Ruct Cleaner என்ற வேதித் திரவத்தைப் பூசி - குறைந்தது 3 மணி நேரம் ஊறவிடுங்கள்.

• பின்பு Wire Brush கொண்டு கம்பிகளைச் சுரண்டி துருத்துகள்களை அகற்றுங்கள்.

• அதன் பின்னர் நன்னீர் கொண்டு - Water Hose Pipe கொண்டு கம்பிகளைச் சுத்தம் செய்து காய விடுங்கள்.

• நன்றாகக் காய்ந்தபின்பு (2 முறைகள் - இரண்டு மணி) நேர இடை வெளியில் - கம்பிகளின் மீது துருத் தடுப்பான் பூச்சு ((Corrosion Inhibitor - say CERA REBARCOTE /Dr Fixit...........................) அடித்து உலரவிடவும்.

அதற்குப் பின்பு உங்களின் கட்டுமான வேலைகளைத் தொடரலாம்.

பதிலளித்தவர் பொறி அ வீரப்பன் ,
பில்டர்ஸ்லைன் இதழிலிருந்து...



Q: எனது வீடு 20 ஆண்டு காலத்திற்கு முந்தையது (சட்டகோப்பு கட்டுமானம் அல்ல). 1800 ச.அடி கொண்டது. இதன் இரு தளங்களில் 10 குடித்தனங்கள் உள்ளன. தற்போது, மொட்டை மாடியில் தலா 450 ச.அடியில் இரு வீடுகள் கட்ட்ட இருக்கிறேன்.(ஆஸ்பெஸ்டால் கூரை மட்டுமே) இதற்கெனெ, தனியாக பூமியிலிருந்து பில்லர் அமைத்து அதன் மீது புதிய கட்டுமானம் அமைக்க வேண்டுமா? அல்லது எப்போதும் போல் தளம் மீது சுவர் அமைத்திட்டால் போதுமா? கீழே தாய்ச் சுவர்கள் தாங்குமா? பெருமாள் சிவன், மின் ஊழியர், சூளை


Answer:


தங்கள் கேள்வியில் எந்தவகை அடிமண், எந்தவகையான அடித்தளம் ( (open Trench Continuosfootingor stub column - gradebeam)) என்ற விவரங்கள் தரப்படவில்லை. 

அடித்தளத்தின் அளவுகள், தரைத்தள மற்றும் முதல் தளத் தாய்ச்சுவர்களின் செங்கல் சுவர்களின் அகலங்களும் தரப்படவில்லை. இவை இருந்தால் தான் G+2 தளங்கள் (மொட்டை மாடி வீடுகள் உட்பட) கட்டமுடியுமா? சுவர்களும் அடித்தளமும் தாங்குமா? என்ற விவரங்களை ஆய்வு செய்ய முடியும். எனவே, திறமையும் அனுபவமுள்ள ஒரு வடிவமைப்பு பொறியாளரை அணுகுங்கள்.



உங்கள் ஐயங்களை பதிவு செய்யுங்கள்

Builders Line : Prompt Publication Editor, Subramanyam No:6, Aishwarya Nagar, First Floor, (Behind Chennai Health Foundation),
Thirumullaivayal, Chennai - 600062.
Phone : 8825577291, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 185000