Q: கேள்வி : எங்கள் வீட்டு குளியலறையின் மேற்கூரையில் எப்பொழுதும் நீர்க்கசிவு உண்டாகி பாசி படர்கிறது. மேல் வீட்டிலும் இதே இடத்தில் குளியலறை உள்ளதால் நீர்க்கசிவு அங்கிருந்துதான் உண்டாகிறது. இதை எப்படி நாங்கள் சரி செய்வது ( மேலே வீட்டு உரிமையாளர் குடியிருக்கிறார்) -கார்த்தி சுந்தர், சூபர் மார்கெட் மேலாளர், திருவரங்கம்
பதில்: உங்கள் வீட்டு நீர்க்கசிவைச் சரிசெய்வதற்கு கீழ்க்கண்ட நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும்.
1. உங்கள் வீட்டு மொட்டை மாடியிலிருந்து நீர்க்கசிவு ஏற்படுகிறதா?
2. உங்கள் வீடு மேலிருப்பவர் வீட்டு நீர்க்குழாய்களில் நீர்க்கசிவு ஏற்படுகிறதா?
3. உங்கள் வீட்டுக்கு மேலிருப்பவர் குளியலறை கீழ் பதித்த ஓடுகளிலிருந்து நீர்க்கசிவு ஏற்படுகிறதா? இவை குறித்து நீங்கள் விளக்கவில்லை.
என்றாலும், நீர்க்குழாய்களிலிருந்தும் தளம்பதித்த ஓடுகளின் இடைவெளி களிலிருந்த்தும் நீர்க்கசிவு இருப்பதாகச் கருதி - அவற்றைச் சரிசெய்யும் பழுது நீக்கும் வழிமுறைகள் தெரிவிக்கப்படுகின்றன.
மேல்வீட்டு/உங்கள் வீட்டு நீர்க் குழாய்களை முற்றிலுமாக PP-R GreenPipes (Heating Process for joining ) அல்லது Composite Pipes (Joining by Threads) கொண்டு மாற்றுங்கள். சாதாரண நீர்க்குழாய்களை இணைக்க Bonding solution பயன்படுத்தப்படுவதால் - அவை கெட்டியாகும் போது இடைவெளிகள் ஏற்பட்டு நீர்க்கசிவு ஏற்படுகின்றது.
குளியலறைத் தளத்தில் பளிங்கு / செராமிக் ஓடுகளைப் பதிப்பதற்கும் -இணைப்பை அடைக்க White Cement பயன்படுத்துவதால் சிலகாலத்தில் அவை பெயர்ந்து நீர்க்கசிவை ஏற்படுத்துகின்றன.
மாற்றாக Silicone sealant (Tile related) கொண்டு இடைவெளிளை அடைக்க வேண்டும். இந்த இரு சரி செய்தல் முறைகள் நல்ல பயனைத் தரும்.
பின்குறிப்பு:
உங்கள் வீட்டு மேற்கூரையின் காங்கிரீட்பலகம் - இதனால் துருப்பிடித்துச் சேதம் அடைந்திருந்தால் அதைச் சரி செய்யத் தனி நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
- பில்டர்ஸ் லைன் மாத இதழிலிருந்து...
ஆன்லைனில் படிக்க.. www.buildersline.in
சந்தாவிற்கு... 8825479234
Q: கேள்வி : நாங்கள் புதிதாக வீடு (ஜி+2) கட்ட உள்ளோம். மூன்று புறமும் 3 வீடுகள் உள்ளன. இவற்றிற்கு இடையே தான் எங்கள் மனை உள்ளது. அந்த வீடுகளை ஒட்டியபடி தான் நாங்கள் வீடு கட்ட உள்ளோம். இப்போது அஸ்திவார பள்ளம் தோண்டும்போது அக்கம் பக்கத்து வீடுகளின் அஸ்திவாரத்துக்கு ஆபத்து வராமல் நாங்கள் எப்படி பணி செய்வது? வழிகாட்டுங்கள்... பழனி மாணிக்கம், எழுதுபொருள் விற்பனையாளர், சென்னை
பதில்: உங்கள் மனை - மூன்றுபக்கங்களிலும் 3 வீடுகள் உள்ளமையால் - உங்கள் வீட்டுக்கு , உங்கள் சொத்து விளிம்பில் (Boundary Line)அடித்தளப் பள்ளம் தோண்டும் போது - அந்த வீடுகளின் அடித்தளமும் சுவர்களும் பெரிதும் பாதிக்கப்படும்.
எனவே, உங்கள் வீட்டு அடித்தளக் குழிகளை மேலுள்ள வரைபடத்தில் காட்டியுள்ளது போல 750 மிமீ (2.50 அடி) தள்ளி - மூன்று பக்கத்திலும் குழிகள் எடுத்து அடித்தளத்தைப் போட்டு - தூணை மேல் எழுப்பி - தரைமட்டத்திற்கு 450 மிமீ (1.50 அடி) கீழாக நிறுத்திட வேண்டும். அதிலிருந்து 230 X 450 மிமீ
அளவுடைய கொடுங்கை விட்டத்தை (Cantilever Beams) (வடிவமைப்புப் பொறியாளரிடம் சரியான வடிவமைப்பு பெற்று ) அமைக்க வேண்டும். அதன் விளிம்பில் தூண்களை நிறுத்தி மேல் எடுத்து செல்ல வேண்டும் (Floating columns).
பின்குறிப்பு: 1. உங்கள் மனையின் அடிமண்வகை
( Type of soil ) தெரிவிக்கப்படவில்லை.
2. உங்கள் வீடும் மற்ற வீடுகளும் Street House என்ற வகையாக இருந்தால் ஒழிய, நகராட்சி கட்டு
மான கட்டுப்பாட்டு விதிகளின் படி - உங்கள் சொத்து விளிம்பிலிருந்து மிகக்குறைந்தது 900 மிமீ (3 அடி) தள்ளியே தூண்கள் போடப்படவேண்டும் என்பதும் சுட்டிக் காட்டப்படுகிறது.
- பில்டர்ஸ் லைன் மாத இதழிலிருந்து...
ஆன்லைனில் படிக்க.. www.buildersline.in
சந்தாவிற்கு... 8825479234
Q: புதிய வீட்டின் சுவர்களில் சிறு சிறு கீறல்கள் விழுவது ஏன்? கேள்வி்: நாங்கள் கே.கே நகரில் புதிதாக ஃபிளாட் ஒன்றை வாங்கியிருக்கிறோம். கட்டி 6 மாதமே ஆன அந்த வீட்டில் சிறுசிறு நுண்ணிய கீறல்கள் விழுந்தாற்போல் சுவற்றில் விரிசல்கள் ஏற்படுகின்றன கட்டுனரிடம் கேட்டால், ‘கட்டிடம் மூச்சு விடுகிறது, கலவை கலக்கும்போது உண்டாகும் காற்று வெளியேறுவதால் லேசான கீறல்கள் ஏற்படுவது இயற்கைதான். அப்படிதான் இருக்கும்’ என்கிறார். இது உண்மையா? பதில் சொல்லுங்கள்? - ஆர்.செளம்யா, ஐடி, ஊழியர், கே.கே.நகர்
முன்னாள் தலைமைப் பொறியாளர் (த.நா.பொ.பா.து) பொறி. அ.வீரப்பன் அவர்கள் கேள்விக்கு பதில் அளிக்கிறார்.
கட்டிடமும் மூச்சு விடவில்லை; கலவையிலிருந்து காற்றும் வெளியேறவில்லை. சுவரில் சிறுசிறு நுண்ணிய விரிசல்கள் ஏற்படுவதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உண்டு.
1.சுவரின் மீது பூசும் கலவையில் -ஒபிசி 53 தரச் சிமெண்ட்டைக் கலப்பதும் -பூச்சை அழுத்தி அழுத்திக் கெட்டியாகத் தேய்ப்பதாலும் சுருக்கவிரிசல்கள் (shrinkage cracks) எனப்படும் மயிரிழை விரிசல்கள் ஏற்படுகின்றன.
2.தேவையின்றி பூசப்பட்ட கலவையின் மீது மீண்டும் ஒபிசி-53 தரச்சிமெண்டைப் பாலாகக் கரைத்துத் தெளித்துத் தேய்ப்பதாலும் இவ்வகை நுண்ணிய விரிசல்கள் விழுகின்றன. இதனால் கட்டடத்திற்கு எந்தப் பாதிப்பும் சேதமும் ஏற்படாது; அச்சம் சிறிதும்மின்றி வசிக்கலாம் இதைப் சரிசெய்வதற்கு இதன் பரப்பின் மீது cracksmicro/fine putty (wallcareputty) - 1 மி.மீ / கனத்திற்குப் பட்டி பார்த்தால் இவ்விரிசல்கள் மறையும்.
முதலில் நீங்கள், சுவரில் ஏற்படும் விரிசல் வடிவமைப்பு விரிசலா அல்லது கலவை பூச்சு விரிசலா என ஆராய வேண்டும். கலவை பூச்சு விரிசல் சாதராணமாக தட்பவெப்ப விரிசலாகவும் ( seasoning crack ) இருக்கலாம் இதற்காக நீங்கள் ஐயம் கொள்ள தேவையில்லை.
- பில்டர்ஸ் லைன் மாத இதழிலிருந்து...
ஆன்லைனில் படிக்க.. www.buildersline.in
சந்தாவிற்கு... 8825479234
Q: கட்டடத்துறை கேள்வி பதில்கள் - 40 வீரப்பன் அய்யா அவர்கட்கு. நாங்கள் 2400 ச.அடி பரப்பு கொண்ட வீட்டு மொட்டை மாடியில் ஒளி ஊடுருவும் கூரை அமைக்க இருக்கிறோம். (தளத்தில் சிறி ய அளவில் மூலிகை சோப் தயாரிக்கும் திட்டம் இருக்கிறது ) பிவிசி, பாலி கார்பனேட் என பல வகை கூரைகள் சொல்கிறார்கள். செலவு குறைந்த, உறுதியான, லேசான கூரைப்பொருட்கள் ஏதாவது இருந்தால், அதன் குணாதிசயங்களோடு விலையையும் ஒப்பிட்டு எனக்குச் சொல்லுங்கள்.. - திருமதி. எம்.அர்ச்சனா, இல்லத்தரசி, விருகம்பாக்கம்
உங்கள் வீட்டு மொட்டைமாடித் தளத்தில் நிறைய வெளிச்சமும் காற்றோட்டமும் உடைய கூரை அமைப்பது வரவேற்கத்தக்கது, அதற்கு மேலும் புதிய கூரைக் கட்டுமானப் பொருளைப் பயன்படுத்திட வேண்டும் என்கிற உங்கள் ஆர்வம் மிகவும் பாராட்டத்தக்கது. ஆனாலும், இரண்டு நிபந்தனைகளை விதித்துள் ளீர்கள்.
1. செலவு குறைந்த லேசான கூரைப் பொருள்.
2.உறுதியாக நிடித்து ழைக்கும் கூரைப் பொருள் எங்களுடைய கருத்துரைகள் இவைதான்.
1..Tata Structura / Jindal RHS / SHS எனப்படும் எஃகு உறுப்புகளைக் கொண்டு கூரைக் கட்டமைப்பு ஏற்படுத்தல் ,
2. அதன் மீது FRP (Fibre Reinforced plastic)
அல்லது polycarbonate Double walled sheet-corrugated & Grooved கொண்டு மூடுவது தேவைகளை நிறைவு செய்யும் (எனிலும் பிவிசி தகடோ/ FRP / Polycarbonate plain தகடோ நீடித்துழைக்காது, விலையும் கூடுதல். எனவே கூடாது)
3.பக்கவாட்டுச் சுவர்களை- போதுமான சன்னல்கள் வைத்த ஃபிளைஆஷ் செங்கல் சுவர்கள் கொண்டு அமைத்திடலாம்.
இதன் செலவு:-
எஃகு கூரையமைப்பு : ரூ. 150/ச.அடி,
Polycarbonate plain : : தகட்டுப் போர்வை ரூ. 400/ச.அடி. பக்கவாட்டுச் சுவர்கள், சன்னல்கள்
பூச்சுவேலை :
ரூ. 40 / ச.அடி.
கூடுதலாக டர்போ வெண்டிலேட்டர்கள் - 6 :
ரூ 1000/ ஒன்று . மொத்தச் செலவு :
ரூ 15 லட்சம் ஆகலாம்.
இதை 30/40 நாட்களில் கட்டி நிறைவு செய்யலாம், பராமரிப்புச் செலவு குறைவு, வசதியாக உழைக்கக் கூடியது. எஃகுக் கூரை அமைப்புக்கு ஒரு திறமை வாய்ந்த வடிவமைப்புப் பொறியாளரை அனுகுங்கள்.
பில்டர்ஸ் லைன் மாத இதழிலிருந்து..
சந்தாவிற்கு : 8825479234
ஆன்லைனில் படிக்க.. : www.buildersline.in
Q: கட்டடத்துறை கேள்வி பதில்கள் - 41 ஐயா, நான் 15 ஆண்டுகளுக்கு முன்புதிருச்சி வயலூர் ரோடு உய்ய கொண்டான் திருமலையில் (நன்செய் நிலப்பகுதியில்) வீட்டு மனை வாங்கி வீடு கட்டினேன். அடித்தளத்தில் பைல் ஃபவுன்டேrன் இட்டு, அதன் மேல் அரனைக் கற்களால் அடித்தளம் அமைத்தேன். மணல் நிரப்பி ,நீர் நிரப்பி, அடி தளம் 1.5 சல்லி கற்களால் மூடப்பட்டது. பின், அதன் மீது (10 சதுரங்கள்) சுவர் எழுப்பி கட்டிடம் கட்டப்பட்டது. தற்போது கட்டிடத்தின் (தளத்தில் அடிப்பகுதியில் மணல் இறக்கம் ஏற்பட்டு ) அதிர்வு ஏற்படுகிறது. நடந்தால் “டப், டப்’, என்ற சப்தம் ஏற்படுகிறது. ஹால் பகுதி மார்பிள் கல்லாகவும், மற்ற ரூம், பகுதிகள் மொசைக் தரையாகவும் இடப்பட்டன. மார்பிள் தரையில் ஒரிடத்தில், ஒர் 5 அடி நீளத்திற்கு சிறிய விரிசல் ஏற்பட்டுள்ளது. மார்பிள் தரையில் 60% தரை உறுதியாக இருக்கிறது. மொசைக் தரையின் பெரும்பகுதி அதிர்வு காணப்படுகிறது. ஒரிரு இடங்களில் வெடிப்பு உள்ளது. இங்குள்ள தெரிந்தவர்களிடம் ஆலோசனை கேட்டபோது தரைத்தளம் முழுவதையும் தோண்டிவிட்டு, மீண்டும் மணல் நிரப்பி, நீர் கட்டி ,அடித்தளத்தை உறுதிசெய்து அதன்மேல் தரை அமைக்க வேண்டும் என்கிறார்கள். நான் தெரிந்த ஒரு பொறியாளரிடம் ஆலோசனை கேட்டபோது , “அவர் முழுவதும் பெயர்க்க தேவை இல்லை சிறிய ஒருபகுதியை வெட்டியயடுத்து மணல் ,நீர் கொண்டு. நவீன முறையில் சரிசெய்யும் தொழில் நுட்பம் இருக்கிறது அதன் படி செய்தால் எளிதாகவும், செலவுகுறைவாகவும் செய்யலாம்’ என்று ஆலோசனை கூறினார். ஐயா, தாங்கள் இது குறித்து உங்கள் ஆலோசனையை தெரிவிக்க வேண்டுமாய் வேண்டுகிறேன். -சார்லஸ் ராஜரத்தினம், திருச்சிரப்பள்ளி
தங்கள் கேள்வியில் கீழ்க்கண்ட தகவல்கள் தரப்படவில்லை.
1. உங்கள் வீடு பாரம் தாங்கும் சுவர் கொண்ட கட்டிட அமைப்பா? இல்லை, காங்கிரிட் தூண்களும், விட்டங்களும் உள்ளனவா? காங்கிரிட்டின் பலகத்தின் கனம் என்ன? உங்கள் வீட்டு முன் போக்குவரத்து சாலை உள்ளதா? அதில் அடிக்கடி பேருந்துகள் / சரக்குந்துகள் செல்கின்றனவா? தரைமட்டத்தில் (Ground Floor) பிளிந்து பீம் (Plinth Beam) போட்டுள்ளீர்களா?
நீங்கள் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில் உங்கள் வீடு ஒரு பாரம் தாங்கும் கட்ட அமைப்பு (காங்கிரிட் தூண்களும், விட்டங்களும் இல்லை) என்று கருதி கீழ்க்கண்ட கருத்துரைகள் தரப்படுகின்றன.
உங்கள் கட்டட அடி மனை மண்ணுக்கும் பிளிந்து பீம், மட்டத்திற்கும் உள்e (ஏறக்குறைய இரண்டு அடி உயரத்தை) இடைவெளியில், களிமண் , போடு மண் கொண்டு நிரப்பி முறையாகக் கெட்டிபடுத்தாமல் தரைத்தளம் அமைக்கப்பட்டதாகத் தெரிகிறது.
களிமண் போடப்பட்ட போடு மண் கீழ் இறக்குவதால் மார்பிளிலும் மொசைக்கிலும் கீழ் இறக்கம் படிவுகள் (Settlement) ) ஏற்பட்டு தeப்பரப்பில் விரிசல்கள் ஏற்பட்டுள்ள கீழ் உள்ள நிரப்பு மண் / போடு மண் கெட்டியாக இல்லாததால் நடக்கும் போது அதிர்வும் டப், டப் என்ற சத்தமும் கேட்கிறது.
எனவே கீழ்க்கண்ட பழுது நீக்கும் முறை தெரிவிக்கப்படுகிறது.
(1) தரை மண் மட்டத்திலிருந்து ஒரு அடி ஆழத்தில் மண்ணையும், தeத்தையும் பெயர்த்து எடுக்கவும்.
(2)தeப்பரப்பில், இரண்டடிக்கு இரண்டடி இடைவெளியில் 3 அடி உயரத்தில் 3” விட்டமுடைய தார் பூசப்பட்ட சவுக்குக் கொம்புகளை 5 கிலோ சம்மட்டியால் உள்ள அடித்து நன்றாக இறக்கவும். சுமார் 200 சவுக்குக் கொம்புகள் அடித்திறக்க வேண்டியிருக்கும்,
(3) அதன் மீது (1’8” உயரத்திற்கு எட்டு அங்குல உயரம் (8”) உள்ள மூன்று அடுக்குகளாக மலை மாவு : செஞ்சரளை மண் 1:3 என்ற கலவை விகிதத்தில் (quarry dust : gravel 1:3) கொஞ்சமாகத் தண்ணீர் தெளித்து திமிசு அல்லது மண் அமுக்கி (Earth Rammer) கொண்டு கெட்டிப்படுத்தவும்
(4) அதன் மீது (4”) நான்கு அங்குலம் உயரம் உள்ள pcc 1:4:8 போட்டு 5 நாட்களுக்கு நீராற்றவும்.
(5) இதன் மேலே உங்களுக்கு வேண்டிய மொசைக் ஓடுகளை்யோ / மார்பிள் பலகங்க்ளையோ கொண்டு தரை அமைக்கலாம்.
அடிமண்ணைக் கெட்டிப்படுத்தாமல் செய்யப்படும் எந்த பழுது நீக்கும் முறையும் முழுப்பயன் அளிக்காது. உங்கள் உதவிக்கு அலைபேசி எண் 98431 48939 (திருச்சி) தொடர்பு கொள்க.
- பில்டர்ஸ் லைன் மாத இதழிலிருந்து...
ஆன்லைனில் படிக்க.. www.buildersline.in
சந்தாவிற்கு... 8825479234
Builders Line : Prompt Publication
Editor, Subramanyam
No:6, Aishwarya Nagar,
First Floor,
(Behind Chennai Health Foundation),
Thirumullaivayal,
Chennai - 600062.
Phone : 8825577291, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
185000
|