அடுக்குமாடி கட்டடங்களில் மின்சார வாகன சார்ஜிங் வசதி?
19 அக்டோபர் 2021   10:52 AM



அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்களில், மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் செய்வதற்காக, 20 சதவீத இடத்தை ஒதுக்க வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

 

நாட்டில் பெட்ரோல், டீசல் விலை எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. பல ஆண்டுகளாக பெட்ரோல் விலையில் ஏற்படும் உயர்வு, தனி வாகன பயன்பாட்டாளர்களை கடுமையாக பாதித்துள்ளது.அதே நேரத்தில், மத்திய- மாநில அரசுகள், மின்சார வாகனங்கள் பயன்படுத்துவதை ஊக்குவிக்க, வாகன பதிவு உள்ளிட்ட பல்வேறு நிலைகளில், சிறப்பு சலுகைகள் மற்றும் மானியங்களை வழங்குகின்றன.

 

இதனால், மின்சார வாகன தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபடும் நிறுவனங்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகிறது. புதிதாக கார், இருசக்கர வாகனம் வாங்க நினைக்கும் பொது மக்கள், மின்சாரவாகனங்களை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர்.சென்னை உள்ளிட்ட நகரங்களில், மின்சார வாகன பயன்பாடு படிப்படியாக உயர்ந்து வருகிறது. இந்த வாகனங்களை சார்ஜ் செய்வதற்கான வசதிகள் கிடைப்பதில் சில சிக்கல்கள் எழுகின்றன.இது குறித்து வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:மின்சார வாகனங்கள் தொடர்பாக, மத்திய வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள் துறை சில அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது.

 

புதிதாக கட்டப்படும் அடுக்குமாடி கட்டடங்களில், வாகன நிறுத்தங்களுக்கான இடத்தில், 20 சதவீத இடத்தை மின்சார வாகன சார்ஜிங் வசதிக்கு ஒதுக்க வேண்டும்.அதற்கேற்ப கட்டட விதிகளில் உரிய திருத்தங்களை, சம்பந்தப்பட்ட மாநில அரசுகள், துறைகள் மேற்கொள்ள வேண்டும்.மேலும், அடுக்குமாடி குடியிருப்புகளை நிர்வகிப்போரும், தங்கள் விதிகளில் இதற்கான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதன் அடிப்படையில், உரிய நிர்வாக உத்தரவுகள் பிறப்பிப்பதற்கான பணிகள் துவங்கி உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.

இன்னும் செய்திகள்    

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 1966430