மணல் விற்பனையில் மக்களுக்கு முன்னுரிமை
19 மார்ச் 2021   04:43 PM



மதுரை:'ஆன்லைன் முன்பதிவில், முன்னுரிமை அடிப்படையில், முதலில் மக்களுக்கு மணல் வினியோகிக்க வேண்டும். மீதி மணலை, லாரி உரிமையாளர்களுக்கு வழங்கலாம்' என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை கரம்பயம் தங்கவேல் தாக்கல் செய்த பொதுநல மனு: கட்டுமானப் பணிக்கு மணல் வழங்கக் கோரி, அரசின் இணையதளத்தில் விண்ணப்பித்தேன். மக்கள் மற்றும் லாரி உரிமையாளர்கள் முன்பதிவு செய்ய, இணைய சேவையில், தனித்தனி வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.அதிலும், வெள்ளிக்கிழமை மட்டுமே பதிவு செய்ய இயலும். பலமுறை முயற்சித்தும், இணையத்திற்கு இணைப்பு கிடைக்கவில்லை. 

அதிக விலைஇணைப்பு கிடைத்தாலும் முன்பதிவு முடிந்து விட்டது என பதில் வருகிறது. என்னைப் போல் பலர், மணல் கிடைக்காமல் சிரமப்படுகின்றனர். இதனால் புரோக்கர், லாரி உரிமையாளர்களிடம் அதிக விலைக்கு மணல் வாங்க வேண்டியுள்ளது.அனைத்து வேலை நாட்களிலும், தமிழ்நாடு மணல் சேவைக்கான இணையதளம் செயல்பட மற்றும் முன்பதிவிற்கான வசதி செய்ய நடவடிக்கை எடுக்க, மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு, தங்கவேல் மனு செய்தார்.நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி அமர்வு விசாரித்தது.அரசுத் தரப்பு, 'மக்கள், லாரி உரிமையாளர்கள் இணையதளத்தில் முன்பதிவு செய்ய, தனித்தனி வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மணல் இருப்பைப் பொறுத்து வினியோகிக்கப்படுகிறது' என தெரிவித்தது.

நீதிபதிகள் உத்தரவு:மதியம், 1:30 மணி வரை முன்பதிவை கணக்கில் கொண்டு, முன்னுரிமை அடிப்படையில், மக்களுக்கு முதலில் மணலை வினியோகிக்க வேண்டும். அதற்கு கட்டட அனுமதி உள்ளதா என உறுதி செய்து, திருப்தி ஏற்படும் பட்சத்தில், மணல் வழங்கலாம்.லாரி உரிமையாளர்கள், மணலை வணிக நோக்கில் விற்பனை செய்ய வாய்ப்புள்ளது. முதலில் மக்களுக்கு வினியோகித்த பின், மீதி மணலை லாரி உரிமையாளர்களுக்கு வினியோகிக்க வேண்டும்.இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இன்னும் செய்திகள்    

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 1966443